சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது |
விஜயகாந்த்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர். ஒருக்கட்டத்தில் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நீண்ட இடைவௌிக்கு பிறகு தற்போது பாடகர் கிரிஷ் ஹீரோவாக அறிமுகமாகும் ''புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்'' என்ற படத்தை தயாரிக்கிறார். புதியவர் சைய்யது இப்ராஹிம் இயக்க, கிரிஷ் ஜோடியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
உடல் நலக்குறைவோடு பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று இப்ராஹிம் ராவுத்தர் பேசியதாவது.... எனக்கு 63 வயதாகிவிட்டது. 40 வருடம் இந்த சினிமா துறையில் இருக்கிறேன். இதுவரை 32 படங்களை தயாரித்துள்ளேன். நிறைய புதுமுக ஹீரோ, ஹீரோயின்கள், இயக்குநர்கள் மற்றும் டெக்னீஷியன்களை அறிமுகம் செய்துள்ளேன். இந்த 40 வருட சினிமா வாழ்வில் இதுவரை தவறாக, ஆபாசமான படங்களை நான் எடுத்தது கிடையாது. சினிமாவுக்கு ஜாதி, இனம், மொழி, மதம் என்று எதுவும் கிடையாது, இதில் நான் உறுதியாக இருப்பவன். முழுக்க முழுக்க கதையை நம்பிதான் படங்கள் எடுப்பேன். இந்தப்படத்தின் கதையும் அப்படித்தான்.
கோ படத்தில் ஒரு பாட்டில் வந்து போன கிரிஷை பார்த்துவிட்டு தான் அவரை இப்படத்தில் நடிக்க வைக்கலாம் என்று இயக்குநரிடம் நானே போய் பேச சொன்னேன். இப்போது எனக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. என்னுடைய படத்திற்கு ஆதரவு தாருங்கள் என்றார்.