அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஹரியின் அசோசியேட் வீரமணி இயக்கத்தில், கதாநாயகனாக நடித்து சென்சார் உறுப்பினர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட "திறப்பு விழா" படம் ரிலீஸாக லேட்டானாலும் "காஞ்சனா 2" வில் தன் திக்குவாய் பேய் கேரக்டர் மூலம் நல்ல அறிமுகம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் "ஜெய ஆனந்த்".
தியேட்டர் லேப் கூத்துப்பட்டறையில் 5 வருடங்களில் பல நாடகங்கள் நடித்து நடிப்புத் திறமையை வளர்த்துக் கொண்ட இவர் "காஞ்சனா 2" படத்தில் ஒவ்வொரு காட்சிகளின்போதும் ஒரே டேக்கில் நடித்ததால் ராகவா லாரன்ஸ் இவரை அழைத்து பாராட்டி உற்சாகப் படுத்திக் கொண்டே இருந்திருக்கிறார். "படத்தில் நான் 30 நாட்களுக்கு மேல் மாஸ்டருடன் நடித்தேன். அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன். நீளம் காரணமாக சில நல்ல காட்சிகள் குறைக்கப்பட்டிருக்கிறது என்றாலும் படத்தில் தன்னுடைய கேரக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறதெனறால் அதற்கு ராகவா லாரன்ஸ் மாஸ்டர்தான் காரணம்" என்கிறார்.
"கண்ணாமூச்சி" என்ற குறும்படத்திற்காக சென்ற வருடம் "சிறந்த நடிகர் 2014" விருது வாங்கியிருக்கும் இவர் இப்போது கதாநாயகனாக நடித்திருக்கும் "திறப்புவிழா", மு.களஞ்சியத்தின் "ஆனந்த மழை" படங்கள் விரைவில் வெளியாகிறது. ஒரு பெரிய படத்தில் வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதாம்.