போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் |
நண்பேண்டா படத்தின் 50வது நாள் நேற்று. ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குள் தனது அடுத்த படமான கெத்துவின் நிறைவு பகுதிக்கு வந்து விட்டார் உதயநிதி ஸ்டாலின். மான் கராத்தே படத்தை இயக்கிய திருக்குமரன் இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார். இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ளது. இன்னும் சில காட்சிகளும், ஒரு பாடல் காட்சியும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியது உள்ளது.
இதுவரை நெக்ஸ்ட் ஸ்டோர் பாய் கேரக்டரில் நடித்து வந்த உதயநிதி சிவகார்த்திகேயன் காக்கி சட்டையில் ஆக்ஷன் ஆழம் பார்த்த மாதிரி உதயநிதி இதில் ஆக்ஷன் களத்தில் இறங்குகிறார். ஆனாலும் ஆக்ஷன் ஹீரோவாக இல்லை. படத்தின் உதயநிதி ஒரு அப்பாவி இளைஞர். எந்த வம்பு தும்புக்கும் போகாமல் தான் உண்டு. தன் வேலையுண்டு என்று இருப்பவர். ஆனால் உதயநிதியின் அப்பா சத்யராஜ் அவருக்கு நேர் எதிர். யார் தப்பு பண்ணினாலும் போட்டு பொளந்திட்டு வந்திடுவார்.