வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாடகர் கிரிஷ், அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் தயாரிக்கும் புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். புதுமுக இயக்குனர் தம்பி சைய்யது இப்ராஹிம் இயக்குகிறார். சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரெஹைய்னா இசை அமைக்கிறார், செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. அதில் கிரிஷ் பேசியதாவது: சினிமாவில் நடிக்கும் ஆசையில்தான் அமெரிக்காவில் நடிப்பு கோர்ஸ் படிச்சேன். ஆனால் சூழ்நிலை பாடகனாக்கி விட்டது. பாடகனாகவே 9 வருடம் கடந்து விட்டேன். ஆனாலும் நடிப்பு முயற்சி என்னை நடிகனாக்கி விட்டது. கோ படத்தில் ஒரு பாட்டில் சின்ன ஷாட்டில் வருவேன். அந்த ஷாட்தான் எனக்கு இந்த வாய்ப்பை கொடுத்தது. இப்ராஹிம் ராவுத்தர் அய்யா என் தந்தையை விட என் மீது அக்கறை கொண்டிருந்தார்.