திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படமான ஆட்டோ ஜானியில் அவருக்கு ஜோடியாகும் நடிகைகள் யார், யார் என்று பட்டிமன்றமே நடக்கும் அளவுக்கு விவாதிக்கப்பட்டு வருவதை அனைவரும் அறிவர். இந்நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் அந்த செய்தி உறுதி படுத்தப்படாத நிலையில், ஆட்டோ ஜானியில் நடிக்க நயன்தாரா தனது சம்பளமாக ரூ 3 கோடி கேட்டதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து ஒரு நடிகைக்கு இவ்வளவு அதிக சம்பளம் கொடுப்பதற்கு பதில் வேறு பிரபல இரண்டு நாயகிகளுக்கு சம்பளம் கொடுத்து விடலாமே என்று மெகா ஸ்டாரிடம் கூறியதாக தெரிகிறது.
இதுவரையில் எந்த ஒரு கதாநாயகியும் முன்னணி இடத்தில் இருக்கும் போதே இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கேட்டவில்லை என்று டோலியுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த உண்மையா அல்லது பொய்யா என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.