'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் நடிகராக திகழ்ந்தவர் சிரஞ்சீவி. ஆனால் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கும் என்டிஆர் மாதிரி தானும் ஆந்திராவின் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்காரணமாக, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு ப்ரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் தேர்தலை சந்தித்தபோது அவருக்கு சாதகமாக அமையவில்லை. அதனால் பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து மத்திய அமைச்சரானார் சிரஞ்சீவி. இந்த நிலையில், தற்போது அவர் மீண்டும் அவர் நடிக்க வந்திருக்கிறார். தனது 150 படத்துக்காக கடந்த ஆறு மாத காலமாக ஏராளமான கதைகள் கேட்டு வந்த அவர், தற்போது பூரி ஜெகந்நாத் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முடிவு செய்து விட்டார். ஆனபோதும், சிரஞ்சீவி நடிக்கும் படத்தை தயாரிக்க எந்த முன்னணி நிறுவனமும் முன்வரவில்லையாம். அதனால் இப்போது சிரஞ்சீவியின் மகனான ராம் சரண் தேஜாவே தந்தை நடிக்கும் ஆட்டோ ஜானி என்ற அந்த படத்தை தயாரிக்கிறாராம். மேலும், சிரஞ்சீவி 8 ஆண்டுகளுக்கு பிறகு நடிக்கும் படத்திற்கு ஆந்திர ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், இந்த படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறாராம் ராம்சரண்.அதோடு, சிரஞ்சீவி முழுநேர அரசியலில் ஈடுபட்டதால் அவருக்கு பின்னால் வளர்ந்து வந்து கொண்டிருந்த மகேஷ்பாபு அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றி விட்டார். அதனால் இழந்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை மீட்கவும் சிரஞ்சீவி முயற்சி எடுப்பார் என்று தெலுங்கு சினிமா வட்டாரம் கிசுகிசுக்கிறது.