தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஏ.ஆர்.முருகதாசின் பாசறையில் இருந்து வந்தவர் சரவணன். அவர் இயக்கிய முதல் படமான எங்கேயும் எப்போதும் மெகா ஹிட் ஆனது. ஆனால், அதற்கடுத்து விக்ரம் பிரபுவை வைத்து இயக்கிய இவன் வேறு மாதிரி, ஜெய்யை இயக்கிய வலியவன் ஆகிய படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில், தமிழில் ஒரு புதிய படத்தை இயக்க ஏற்கனவே திட்டமிட்டிருந்த சரவணன், இப்போது அந்த படவேலைகளை தள்ளி வைத்து விட்டார். மாறாக, கன்னடத்தில் புனித் ராஜ்குமார் நடிக்கும் படமொன்றை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.
அந்த கன்னட படத்தில் நடிப்பதற்கு தமிழில் இருந்து அஞ்சலி மாதிரி யாரையாவது அழைத்து செல்லலாம் என்றுதான் திட்டமிட்டிருந்தாராம் சரவணன். ஆனால், புனித்ராஜ்குமார் தலையிட்டு, இந்த படத்தில் பல்லவி சுபாஷை நடிக்க வைக்கலாம் என்று அவருக்கு ஸ்ட்ராங்கான ரெகமன்ட் செய்து விட்டாராம். அதனால் அவர் விருப்பத்துக்கே விட்டுக்கொடுத்து விட்டாராம் சரவணன்.
மேலும், இந்த பல்லவி சுபாஷ், சிம்புவை வைத்து கெளதம்மேனன் இயக்கிய சட்டென்று மாறுது வானிலை படத்திற்கு கமிட்டானவர். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பை சில நாட்கள் மட்டுமே நடத்திய கெளதம்மேனன், திடீரென்று அஜித்தின் என்னை அறிந்தால் பட வாய்ப்பு வந்ததால், சிம்பு படத்தை கிடப்பில் போட்டு விட்டு சென்றார். ஆனால், இப்போது அதே படத்துக்குத்தான் அச்சம் என்பது மடமையடா என்று பெயர் மாற்றி வைத்துள்ளார் கெளதம்மேனன். அதையடுத்து, மீண்டும் சிம்பு அந்த படத்துக்காக அரிதாரம் பூசி நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இப்போது பல்லவி சுபாஷை அழைத்தபோது கால்சீட் இல்லை என்று மறுத்து விட்டார். அப்படி அவர் கெளதம்மேனன் படத்தில் நடிக்காததற்கு காரணம் சரவணன் இயக்கும் இந்த கன்னடம் படம்தானாம். இந்த படத்திற்குதான் ஒரே கால்சீட்டாக 60 நாட்கள் கொடுத்து நடித்து வருகிறாராம் பல்லவி சுபாஷ்.