ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிம்பு-ஹன்சிகா நடித்த வாலு படம் எப்போதோ முடிந்து விட்டபோதிலும், ரிலீஸ் தேதிகள் மட்டும் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு பின்னர் வேறு தேதிக்கு மாற்றப்பட்டு வருகிறது. அதனால் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தரே வாலு படத்தை வெளியிட தயாராகிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதை இனிமே இப்படித்தான் படத்தின் ஆடியோ விழாவில் சிம்புவும் உறுதிபடுத்தினார். இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ஜூன் 12-ந்தேதி வாலு படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதே நாளில்தான் சந்தானம் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படமும் திரைக்கு வருவதாக கூறுகிறார்கள்.
ஆனால் இரண்டு படங்களும் ஒரேநாளில் வெளியானால் வசூல் பாதிக்கும் என்பதால் ஏதாவது ஒரு படத்தை ஒரு வாரம் தள்ளி வைக்குமாறு சில முன்னோடிகள் அவர்களை கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். ஆனால், எப்போதோ வெளியாக வேண்டிய வாலு படம் இப்போதாவது வெளியாகிறதே என்கிற மனநிலையில் இருக்கும் சிம்புதரப்பு இந்த ஜூன் 12-ந்தேதியை எப்படி மாற்றிக்கொள்ள விரும்பவில்லையோ அதேபோல் சந்தானமும் இனிமே இப்படித்தான் படத்தை அதே தேதியில் வெளியிடுவதில் இருந்து பின்வாங்க யோசிப்பதாக கூறப்படுகிறது.
இருப்பினும், வாலு, இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் ஒன்றை ஜூன் 19-ந்தேதியில் வெளியிட வைப்பதற்கான பேச்சுவார்த்தையும் ஒரு பக்கம் தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், தன்னை மன்மதன் படம் மூலம் திரையுலகிற்கு கொண்டு வந்த சிம்புவுக்காக சந்தானம் விட்டுக்கொடுப்பாரா? இல்லை நாம் இருக்கிற சூழ்நிலையில் போட்டி வேண்டாம் என்று சிம்புவே பின்வாங்குகிறாரா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.