'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ஆதவன் படத்தில் ஒரேயொரு காட்சியில் தலையைக்காட்டினார். அடுத்து, எம்.ராஜேஷ் இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் ஹீரோவானார். இப்படத்தில் கதாநாயகனுக்கு இணையான காமெடி கேரக்டரில் நடித்தார் சந்தானம். அவரது பங்களிப்பு ஓகேஓகே படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இதனால் உதய்நிதி அடுத்த நடித்த இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா ஆகிய இரண்டு படங்களிலும் சந்தானத்தையே காமெடியனாக நடிக்க வைத்தார்.
நண்பேன்டா படப்பிடிப்பு நடைபெற்றபோது நயன்தாரா விவகாரத்தில் சந்தானம் உதயநிதி இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. அதை உண்மையாக்குவதுபோல், தனது மூன்று படங்களுக்குப் பிறகு சந்தானத்தைவிட்டு பிரிந்தார் உதயநிதி. அவர் தற்போது நடித்து வரும் கெத்து, இதயம் முரளி என இரண்டு படங்களிலும் சந்தானம் நடிக்கவில்லை. இவ்விருபடங்களில் கருணாகரன், தம்பி ராமையா என வேறு காமெடியன்களை நடிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் தனது வெற்றிக்குக் காரணமான இயக்குனர் ராஜேஷ் மற்றும் சந்தானத்துடன் இணைந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என திட்டமிட்டு இருக்கிறாராம் உதயநிதி. வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க படத்தை இயக்கிவரும் எம். ராஜேஷ் அடுத்து இயக்கும் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்க உள்ளார்.