விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் திரைப்படம் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. தற்போது 2013ம் ஆண்டுக்கான விருதுக்காக விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. அதேபோல 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு மானியம் வழங்கவும் விண்ணப்பம் பெற்று வருகிறது. இந்த விண்ணப்பம் அளிக்க நேற்று கடைசி நாள்.
ஆனால் இந்த தகவல் பலரைச் சென்று சேரவில்லை அதானல் இதன் காலக்கெடுவை நீடிக்க வேண்டும் என்று திரையுலகின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதை ஏற்று தமிழக அரசு விண்ணப்பங்களை வருகிற 27ந் தேதி வரை கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி வளாகத்தில் உள்ள திரைப்படத்துறை நல வாரியத்தில் விண்ணப்பங்களை நேரில் கொடுக்கலாம். அல்லது தபாலில் அனுப்பி வைக்கலாம். அரசு விடுத்துள்ள செய்தி குறிப்பில் மேற்கண்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.