‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. ஆர்யா, விஜய்சேதுபதியுடன் ஷாமும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். சட்டப்படி நடக்கும் ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி மற்றும் ஜெயில் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் ஷாம்.
புறம்போக்கு படம் தூக்கு தண்டனையை நீக்க வேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ளது. அதில் மெக்காலே என்று போலீஸ் அதிகாரியாக வரும் ஷாம் தூக்கு தண்டனை வேண்டும் என்கிற கருத்துடையவர். ஆர்யாவை தூக்கில் போடுவதற்காகவே நியமிக்கப்பட்ட அதிகாரி அவர். கடைசியில் தூக்கிலும் போட்டுவிடுவார். படத்தில் தூக்கு தண்டனை வேண்டும் என்ற கருத்துடையவராக நடித்த ஷாம் நிஜத்திலும் தூக்கு தண்டனை வேண்டும் என்ற கருத்துடையவராக இருக்கிறார்.
கடந்த சில நாட்களாக புறம்போக்கு டீம் தமிழ்நாடு முழுவதும் சுற்றி ரசிகர்களையும், பத்திரிகையாளர்களையும் சந்தித்து வருகிறது. முக்கிய ஊர்களில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் "தூக்கு தண்டனை மனித குலத்துக்கு விரோதமானது. காட்டுமிராட்டித்தனமானது. ஒரு உயிரை எடுக்கும் அதிகாரம் உலகில் யாருக்கும் இல்லை" என்று கருத்து சொல்லி வருகிறார். அருகில் இருக்கும் ஷாம் "தவறு செய்தவர்கள் தண்டனை பெற்றே தீரவேண்டும். தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் தான் குற்றத்தை குறைக்கும், குற்றவாளிகளுக்கு பயத்தை கொடுக்கும். தூக்கு தண்டனை வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று கூறிவருகிறார்.
"இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் எப்போதும் மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பவர். புறம்போக்கு படத்தில் நடித்தவர்கள் அனைவருமே படத்தின் கருத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார் ஜனாவின் உதவியாளர்.