பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சென்னையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள் சினிமா தொடர்பான படிப்புகளை கற்றுத் தருகிறது. தரமணியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரியில் சினிமா கற்றுத் தரப்படுகிறது. தற்போது இன்னுமொரு அரசு கல்லூரியான இசைக் கல்லூரியிலும் இந்த ஆண்டு முதல் சினிமா கற்றுத்தரப்பட இருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைகழக துணைவேந்தர் வீணை காயத்ரி கூறியதாவது: தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைகழகத்துக்கு உட்பட்ட இசைக் கல்லூரிகளில் வாய்பாட்டு, வீணை, வயலின், மிருதங்கம், நாதஸ்வரம், பரதநாட்டியம், நாட்டுப்புற கலைகள் கற்றுதரப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு புதிதாக இளங்கலை பட்டப்படிப்புக்காக சினிமா கற்றுத்தரப்பட இருக்கிறது. இயக்கம், திரைக்கதை அமைப்பு, அனிமேஷன், ஒலிப்பதிவு, ஒளிப்பதிவு, எடிட்டிங், விஷூவல் எபெக்ட்ஸ், ஆகிய படிப்புகள் இணைந்த பி.எஃப்.ஏ (பேச்சுரல் ஆஃப் பிலிம் ஆர்ட்ஸ்) கற்றுத்தரப்படுகிறது.
முதுகலை பட்டப்படிப்பில் டிசைனிங், திரையிசை கற்றுத் தரப்படுகிறது. இசை ஆர்வம், சினிமா ஆர்வம், அதற்கான அடிப்படை அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். இந்த மாத இறுதியில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைழகத்திற்கு தமிழ அரசு சோழிங்கநல்லூரில் 32 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. விரைவில் அங்கு கட்டுமானப் பணிகள் தொடங்க இருக்கிறது. இவ்வாறு வீணை காயத்ரி கூறினார்.