துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
இந்த மாதம் உத்தம வில்லன், வை ராஜா வை, புறம்போக்கு, 36 வயதினிலே, இந்தியா பாகிஸ்தான் போன்ற பெரிய படங்கள் வெளிவந்தது. ஆனால் வருகிற 22ந் தேதி வெள்ளிக்கிழமை முழுக்க முழுக்க சிறுபட்ஜெட் படங்கள் வெளிவருகிறது.
டிமாண்டி காலனி, சிறுவாணி, விந்தை, கமரகட்டு, நண்பர்கள் நற்பணி மன்றம், திறந்திடு தீசே என்ற 6 படங்கள் ஒரே நாளில் வெளிவருகிறது. இதில் டிமாண்டி காலனி அருள்நிதி நடித்துள்ள திகில் படம். இதனை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்தில் ஹீரோயின் கிடையாது. ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். திறந்திடு தீசே சஸ்பென்ஸ் திரில்லர் படம். ஒரு மது பாருக்குள் நடக்கும் சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
சிறுவாணி எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் திகில் கதை, இயக்குனர் ராதாபாரதி நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி உள்ள படம் நண்பர்கள் நற்பணி மன்றம். திருமணத்துக்கு பிறகும் தொடரும் நட்பு சம்பந்தமான படம். கமரகட்டு பள்ளி மாணவர்களின் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளும் பற்றிய படம். விந்தை ஒரு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடையும் காதல் ஜோடிகளின் கதை. ஒரு நாள் போலீஸ் நிலையத்தில் நடக்கும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள படம். 6 படங்களில் எந்த படம் தாக்கு பிடிக்கும், எந்த படம் ஆச்சர்ய வெற்றியை கொடுக்கும் என்பது 22ந் தேதி மாலை தெரியும்.