ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2014ம் ஆண்டு வெளிவந்த படங்களில் விமர்சன ரீதியாகவும் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களில் குறிப்பிட வேண்டிய படம் 'ஜிகர்தண்டா'. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்காக பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருதும் கிடைத்தது. இந்தப் படம் முடிவடையும் தருவாயில் படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கும், தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் இடையே தகராறு உருவானது. ஒரு கட்டத்தில் படம் வெளிவருமா என்று கூட சந்தேகம் எழுந்தது. அதன் பின் சமரசப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு படம் வெளிவந்து வெற்றியும் பெற்றது.
தற்போது இந்தப் படத்தின் ஹிந்தி ரீமேக் விவகாரத்தில் மீண்டும் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்குத் தெரியாமலேயே தயாரிப்பாளர் கதிரேசன் விற்று விட்டார் என்று சொல்லப்படுகிறது. படத்திற்கு கதை எழுதியவர் என்ற உரிமையில் கார்த்திக்கிற்கும் ரீமேக் ரைட்ஸில் விற்ற பணம் சென்று சேர வேண்டும். அது மட்டுமல்ல அவருடைய அனுமதி இல்லாமல் ரீமேக்கை விற்கவும் முடியாது என்கிறார்கள். அதனால் கார்த்திக் இயக்குனர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர் கதிரேசன் மீது புகார் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. விரைவில் இது சம்பந்தமாக பஞ்சாயத்து நடைபெறலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.