'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் எதையுமே பிரம்மாண்டமாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். அவரது எண்ணங்கள் எத்தனை விசாலமானது என்பதற்கு உதாரணம்தான் சென்னை தி.நகரில் உள்ள பிரஷாந்த் கோல்ட் டவர் கட்டிடம். பிரஷாந்த் தற்போது நடித்து வரும் சாஹசம் படமும் கூட தியாகராஜனின் பிரம்மாண்டமான எண்ணத்தின் வெளிப்பாடாகவே வளர்ந்து வருகிறது. பாலிவுட் நடிகை நர்கீஸ் பக்ரிக்கு பல லட்சங்களை கொட்டிக் கொடுத்து ஒரு பாடலுக்கு நடனமாட அழைத்து வந்தார்.
லண்டனைச் சேர்ந்த புதுமுக நடிகையை பிரஷாந்துக்கு ஜோடியாக நடிக்க வைத்திருக்கிறார். தமன் இசையில் சங்கர் மகாதேவன், சிம்பு, அனிருத், லட்சுமிமேனன் என பல பிரபலங்களை பாட வைத்திருக்கிறார். இவ்வளவும் செய்துவிட்டு சாஹசம் படத்தின் இசைவெளியீட்டை சாதாரணமாக நடத்துவதில் தியாகராஜனுக்கு உடன்பாடில்லை. எனவே மலேசியாவில் சாஹசம் இசைவெளியீட்டை நடத்த இருக்கிறார். ஜூன் 6 ஆம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் உள்ள பிரம்மாண்டமான ஆடிட்டோரியத்தில் சாஹசம் இசை வெளியீடு நடைபெறுகிறது!
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்த்திரைப்பட நட்சத்திரங்கள் பலரும் கோலாலம்பூர் செல்கின்றனர். அவர்களில் சிவகார்த்திகேயன், அனிருத், சிம்பு ஆகியோரும் அடக்கம்.