டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி இடத்தை பிடிக்கும் மலையாள நடிகைகள் பெரும்பாலும் தமிழ், தெலுங்கு என அப்படியே ரூட்டை மாற்றி டாப் கியரில் பாலிவுட் பக்கம் தாவி விடுகின்றனர். அதன்பின் அதிக சம்பளம் தருவதாக இருந்தாலும்கூட தமிழ் சினிமா பக்கமே தலைகாட்ட யோசிக்கும் இவர்கள், அளவான சம்பளம் தரும் மலையாள சினிமாவில் நடிக்கவா ஆர்வம் காட்டப்போகிறார்கள்.? தாய்மொழியாக இருந்தாலும் சம்பளம் குறைவு என்பதால் கால்ஷீட்டை காரணம் காட்டியே மலையாளப் படங்களில் நடிப்பதை தவிர்த்து விடுகிறார்கள்.
இதற்கு கண்முன்னே அசின், நயன்தாரா என நடமாடும் சீனியர் உதாரணங்களும் உண்டு. அமலாபால், லட்சுமி மேனன், மியா ஜார்ஜ், கீர்த்தி சுரேஷ், என லேட்டஸ்ட் உதாரணங்களும் கூட உண்டு. இப்போது இவர்கள் வரிசையில் மலையாளத்தில் இருந்து புதிய வரவாக வந்துள்ளார் மஞ்சிமா மோகன். ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார்.
அந்த சூட்டோடு மலையாளத்தில் அடுத்த வாய்ப்புகளை எதிர்பார்த்திருந்தவருக்கு கௌதம் மேனன் டைரக்சனில் 'அச்சம் என்பது மடமையடா' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தால் மறுக்க முடியுமா என்ன.? உடனே ஒகே சொல்லிவிட்டார். ஆனால் “மற்றவர்கள் எப்படியோ தெரியாது.. எனக்கு மலையாள சினிமாவில் நடிப்பது தான் வசதியாக இருக்கிறது. அதனால் முழுநேரமும் இங்கேதான் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.. அந்தவிதமாக, வரும் நாட்களில் எனது ரூட்டையும் மாற்றிக்கொள்வேன்” என தாய்மொழி பாசத்தோடு பேசுகிறார் மஞ்சிமா மோகன்.