Advertisement

சிறப்புச்செய்திகள்

சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆகஸ்ட் மாதத்திற்குள் விடியல் படத்தை முடித்து கொடுக்க வேண்டும்: சரத்குமாருக்கு ஐகோர்ட் உத்தரவு

19 மே, 2015 - 11:10 IST
எழுத்தின் அளவு:
High-court-order-to-Sarathkumar-in-Vidyal-movie

வல்லமை தாரயோ, கொல கொலையா முந்திரிக்கா போன்ற படங்களை தயாரித்த கிரிகுஜா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். சரத்குமார் நடிக்க, கே.ஆர்.செல்வராஜ் இயக்கத்தில், விடியல் என்ற படத்தை தயாரித்தது. சினேகா, சரத்குமார் ஜோடியாக நடித்தார். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் நின்று விட்டது.


இந்த நிலையில் கிரிகுஜா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தது. அது தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: விடியல் என்ற படத்தை தயாரித்து தருவதாக நடிகர் சரத்குமார் எங்கள் நிறுவனத்துடன் 2010ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தார். தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் தானே செய்து தருவதாகவும், 6 மாதத்துக்கள் படத்தை முடித்து தருவதாகவும் அவர் ஒப்பந்தம் செய்தார். இதற்காக அவர் முன் பணமும் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு படத்தை தனது ஆர்.ஆர்.மூவீஸ் நிறுவனமே தயாரிக்கும் அதற்காக வேலூர், திருவண்ணாமலை பகுதி ஏரியா வேண்டும் என்று ஒப்பந்தம் செய்தார் அதற்கும் சம்மதித்தோம்.


ஆனால் விடியல் படத்தை தயாரிக்காமல் சென்னையில் ஒரு நாள் என்ற படத்தை தயாரித்தார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அப்போது 2014ம் ஆண்டு டிசம்பருக்குள் விடியல் படத்தை முடித்து தருவதாக கூறினார். அதற்குள்ளும் முடித்து தரவில்லை. எனவே எங்களிடம் பெற்ற தொகைக்கு அசையா சொத்துக்களை உத்தரவாதமாக தருவதோடு படத்தையும் முடித்து தர உத்தரவிடவேண்டும். என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.


இந்த வழக்கில் சரத்குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வருகிற ஆகஸ்ட் 31ந் தேதிக்குள் படத்தை முடித்து தர கால அவகசாம் கோரப்பட்டது. அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 31க்குள் படத்தை முடித்துக் கொடுக்க உத்தரவிட்டதுடன். அதன் பிறகும் கால அவகாசம் கேட்டால் அசையா சொத்துக்களை உத்தரவாதமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதோடு விசாரணையை செப்படம்பர் மாதத்திற்கு தள்ளி வைத்தது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in