தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விக்ரம்-சமந்தா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் பத்து எண்றதுக்குள்ள. இந்த படத்தில் விக்ரம் மாஸ் ஹீரோவாக தனது பாணியை மாற்றி நடித்துள்ளார். அதேபோல், சமந்தா இரண்டுவிதமான மாறுபட்ட வேடங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேபாளத்தில் நடந்தது. இருப்பினும் இன்னும் பேட்ஜ் ஒர்க் வேலைகள் நிறைய உள்ளதாம். ஆனால், நேபாளத்தில் அவர்கள் படப்பிடிப்பு நடத்த பகுதிகள் எல்லாமே நிலநடுக்கத்தில் அழிந்து விட்டதாம். அதோடு, மீண்டும் நேபாளம் செல்லும் எண்ணமும் இல்லையாம். அதனால், நேபாளத்தில் படமாக்க திட்டமிட்டிருந்த காட்சிகளை இப்போது பல்கேரியா நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது விக்ரம் வேறு படத்திற்கு கால்சீட் கொடுக்கவில்லை என்றபோதும், 24, வேலையில்லா பட்டதாரி-2 படங்களில் சமந்தா பிசியாக இருப்பதால், அடுத்த மாதம் பல்கேரியா சென்று 6 நாட்கள் படப்பிடிப்பு நடத்துகிறாராம் விஜய்மில்டன்.