இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அட்டகத்தி படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்தவர் நந்திதா. அந்த படம் வெற்றி பெற்றதால், அதையடுத்து அவரைத்தேடி கிராமத்து கேரக்டர்களாக செல்லத் தொடங்கின. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி படங்களைத் தொடர்ந்து இப்போது இடம் பொருள் ஏவல், அஞ்சல, உப்புக்கருவாடு, புலி ஆகிய படங்களிலும் கிராமத்து கெட்டப்பிலேயே நடித்துள்ளார். ஆனால், நிஜத்தில் நந்திதா சிட்டியில் பிறந்து வளர்ந்த பெண் என்பதால், எந்நேரமும் மாடர்ன் காஸ்டியூமில்தான் வளையவருகிறார். தனக்கு கிராமத்து உடைகளை விட சிட்டி உடைகளே ரொம்ப மேட்சாக இருக்கும் என்பதை இயக்குனர்களுக்கு உணர்த்த, யாரை எப்போது சந்திக்க சென்றாலும் பக்கா சிட்டி பெண்ணாகவே செல்கிறார்.
இருப்பினும், கிராமத்து கதைகளுக்கு மட்டுமே நந்திதாவை தொடர்பு கொள்கிறார்கள் கோலிவுட் டைரக்டர்கள். ஆனால், இந்த நிலையை தொடர விடக்கூடாது என்று நினைக்கும் நந்திதா, தற்போது சில சிட்டிப்பட டைரக்டர்களை சந்தித்து தன்னை மாடர்ன் ரோலில் நடிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டு வருகிறார்.
ஆனால் இதற்கு பின்னால் இன்னொரு காரணமும் உள்ளதாம். சினிமா உலகில் சிட்டி கதைகளில் நடிக்கும் நடிகைகளின் சம்பளம் படத்துக்குப்படம் எகிறிக்கொண்டே செல்ல, வில்லேஜ் கதைகளில் நடிப்பவர்களை யாரும் கண்டு கொள்வதே இல்லையாம். 5 லட்சத்தை எட்டிப்பிடிக்கவே பல படங்களில் நடிக்க வேண்டியுள்ளதாம். அந்த வகையில், நந்திதாவின் சம்பளமும் இன்னும் கீழ் மட்டத்திலேதான் உள்ளதாம். அதனால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையில் இறங்கியிருக்கிறாராம் நந்திதா.