ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஐ படத்தை அடுத்து விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் பத்து எண்றதுக்குள்ள. லாரி டிரைவராக விக்ரம் நடிக்கும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கிறார். சென்னையில் தொடங்கி நேபாளம் வரை கதையோட்டம் செல்லும் இந்த படத்தில் க்ளைமாக்ஸ் நேபாளத்தில் நடந்து முடிந்தது.
அதையடுத்து அவர்கள் சென்னை திரும்பிய நான்கு நாட்களில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அவர்கள் படப்பிடிப்பு நடத்தி வந்த ஏரியாவில் ஒரு வீடுகள்கூட இல்லையாம். ஆக, அதிர்ஷ்டவசமாக பத்து எண்றதுக்குள்ள யூனிட் உயிர் தப்பினர். இந்த சேதி கேட்டு விக்ரம், சமந்தா, விஜய் மில்டன் அனைவரும் சில வாரங்களாகவே அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தனர்.
இந்த நிலையில், மனதை உற்சாக நிலைக்கு மாற்றும் முயற்சியாக மே மாதம் தொடக்கத்திலேயே தனது குடும்பத்துடன் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார் விக்ரம். இந்த மாதம் முழுக்க சினிமாவை விட்டு முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும் என்று நினைத்த விக்ரம், சினிமா தொடர்புகளை முற்றிலுமாக துண்டித்து விட்டாராம். அதோடு, தன்னை யாராவது தொடர்பு கொண்டால் அவர்கள் தான் லண்டனில் இருப்பதை தெரிந்து கொள்வதற்காக போனில் ரெக்கார்டு பண்ணி வைத்திருக்கும் விக்ரம், தான் மே மாதம் இறுதியில் சென்னை திரும்புவதையும் தெரிவித்துள்ளார்.