ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காஞ்சனா, மங்காத்தா, அரண்மனை என தொடர் ஹிட் படங்களால் நடிகை லட்சுமி ராய்க்கு இப்போது பட வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. தற்போது சவுகார் பேட்டை என்ற திகில் படத்தில் ஸ்ரீகாந்த் உடன் நடித்து வருகிறார். லட்சுமி ராய் தான் எங்கு சுற்றுலா சென்றாலும் அங்கு ஏதாவது சாகசம் செய்வார். சமீபத்தில் கூட பேராசூட்டில் பறந்தபடி போட்டோ எடுத்து அதை டுவிட்டரில் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், தாய்லாந்து சென்றுள்ள லட்சுமி ராய், அங்கு புலிகள் சரணலாயத்திற்கு சென்றார். அங்கு புலிகுட்டி ஒன்றை தன் மடியில் வைத்து புட்டிபால் ஊட்டி மகிழ்ந்துள்ளார்.
இதுகுறித்து லட்சுமி ராய் தன் டுவிட்டர் பக்கத்தில், போட்டோவுடன் செய்தி வௌியிட்டிருப்பதாவது, எனது சாகச பட்டியலில், புலிக்கு பால் ஊட்டி சாகசம் செய்ய வேண்டும் என்பது எனதும் ஒன்று. அந்த ஆசை இப்போது நிறைவேறியுள்ளது. இந்த தருணத்தை என்னால் மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.