தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காலையிலிருந்து கோலிவுட்டே பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஒரு செய்தி நயன்தாராவின் ரகசிய திருமணம் பற்றிய செய்தி தான். தனுஷ் தயாரிப்பில், விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் ''நானும் ரவுடி தான்'' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா தான் நாயகி. படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நெருக்க அதிகமாகி இருவரும் காதலில் விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மொரீஷியஸ் தீவிற்கு சுற்றுலா சென்று வந்ததாகவும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா காஸ்ட்லியான கார் ஒன்றை பரிசளித்துள்ளார் என்றும் கூட செய்திகள் வந்தன.
இந்நிலையில், கடந்தவாரம் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் உள்ள சர்ச் ஒன்றில் ரகசியமாக திருமணம் நடந்ததாக இன்று காலை முதலே செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இந்த திருமண செய்தியை விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் மறுத்துள்ளனர்.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, திருமண செய்தி உண்மை கிடையாது. இதுபோன்ற தவறான செய்திகள், வேலையை மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் எங்களை பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
திருமணம் பற்றி நயன்தாரா கூறியிருப்பதாவது, எனக்கு திருமணம் ஆனதாக வந்த செய்தியில் துளியும் உண்மையில்லை. என் விஷயத்தில் மீடியாக்கள் கொஞ்சம் ஓவர் டைம் எடுத்து வேலை செய்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பது பெரிய விஷயம், எனக்கு திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக அதை இந்த உலகத்திற்கு சொல்வேன், ஔிந்து கொண்டு திருமணம் செய்யும் அவசியம் எனக்கில்லை என்று கூறியிருக்கிறார்.