டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுமார் எட்டு ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி தற்போது ஆட்டோ ஜானியாக அவதாரம் எடுக்க உள்ளதை அனைவரும் அறிவர். இது அவருடைய 150வது படமாகும். இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக சிரஞ்சீவி கடுமையாக ஹோம் வொர்க் செய்கிறாராம். அவர் தன் வீட்டிலேயே இருக்கும் ஜிம்மில் கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். குறிப்பாக அவர் தனது நடன அசைவுகளுக்காக ரொம்பவே மெனக்கெட்டு வருகிறாராம். அவருடைய நடன அசைவுகளை கண்டு இன்றைய இளம் ஹீரோக்களே மூக்கின் மேல் விரல் வைப்பர். மேலும் அவர் தனது பேவரைட் பஞ்ச் வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறாராம். காமெடியிலும் கலக்க இருகிறாராம். மொத்தத்தில் மெகா ஸ்டார் ஆட்டோ ஜானியாக வந்து அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார். இந்த புதிய படத்தில் அவர் மிகவும் இளமையுடனும், புத்துணர்ச்சியுடனும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.