பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
காஷ்மீர், நாட்டின் மிக அழகிய இடம். நான் இந்த இடத்தை மிகவும் விரும்புகிறேன். இந்த அழகிய இடத்தைவிட்டு, சுவிட்சர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கு படப்பிடிப்பிற்கு செல்லும் திரையுலகத்தினரை, முட்டாள்கள் என்றே கூற வேண்டும் என்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் கூறியுள்ளார்.
சல்மான் கான், கபீர் கான் இயக்கத்தில் உருவாகி வரும் பஜ்ரங்கி பைஜான் படத்திற்காக, தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ளார்.
படப்பிடிப்பின் இடையே பத்திரிகையாளர்களை சந்தித்த சல்மான் கான் கூறியதாவது, காஷ்மீர், இந்த பூமியின் மிகவும் அழகான பகுதி. நான் இந்த அழகிய பகுதிக்கு, சூட்டிங்கிற்காக வந்துள்ளேன். இந்த அழகிய பகுதியை காண மீண்டும் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.
இந்த காஷ்மீரின் அழகை பார்க்காதவர்கள், இந்த உலகில் எந்தவொரு அழகையும் பார்க்காதவர்கள் என்பேன் என்று சல்மான் கான் கூறினார்.