தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மைனா,கும்கி போன்ற தரமான படைப்புகளால் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இயக்குநர் பிரபு சாலமன் கடைசியாக இயக்கிய கயல் படம் எதிர்பார்த்த அளவு வசூலில் வெற்றி பெறவில்லை இருப்பினும் இப்படத்தின் இசை மற்றும் கதாப்பாதிரங்களின் தேர்வும் நடிப்பும் என பல தரப்பில் பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் தற்போது சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பிரபு சாலமன் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். இப்படத்தில் டோலிவுட்டின் வளர்ந்து வரும் இளம் நடிகர் கார்த்திக் ராஜு நாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. திப்பு படத்தின் வாயிலாக தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க துவங்கிய கார்த்திக் ராஜு தற்போது பல தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றார். இவர் தற்போது டோலிவுட்டின் பெண் இயக்குநர் சன்யாவின் படத்தில் நடித்து வருக்கின்றார். இவர் இப்படத்தை முடித்ததும், பிரபு சாலமன் தனுஷ் படத்தை முடித்ததும் இருவரும் இணைந்து பணியாற்றுவார்கள் என தெரிகின்றது.