தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் தற்போது வெளியாகியிருக்கும் புறம்போக்கு படத்தில் அனந்த ராமன் என்ற போலீஸ் வேடத்தில் நடித்திருப்பவர் ராஷிக். அப்படத்தின் இறுதி காட்சியில், அதாவது ஆர்யாவை தூக்கில் போட்ட பிறகு, விஜயசேதுபதியிடம் சென்று, அந்த கயிற்றுல எனக்கு ஒரு துண்டு வெட்டி கொடு. வீட்டுல கட்டினா காத்து கறுப்பு அண்டாது என்று கேட்பது இந்த ராஷிக்தான். இந்த டயலாக்கை அவர் பேசும்போது தியேட்டரில் கைதட்டல் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் என்ன இது போலீஸ்காரர் இப்படி கேட்கிறார் என்று சிலர் திட்டும் குரலும் கேட்கிறதாம்.
ஆக, முதல் படத்திலேயே எனக்கு பேசப்படும் வேடத்தை கொடுத்து விட்டார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் இந்த ராஷிக்.
இந்த புறம்போக்கு படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது பற்றி அவர் கூறும்போது, புறம்போக்கு படத்திற்கு ஆர்ட்டிஸ்ட் செலக்சன் நடக்கிறது என்பதை கேள்விப்பட்டதும் அலுவலகத்துக்கு சென்று எனது போட்டோக்களை கொடுத்து விட்டு வந்தேன். மூன்று மாதம் கழித்து அழைப்பு வந்தது. சென்றபோது எனக்கு போலீஸ் டிரஸ் போட்டு பார்த்து விட்டு, நாளை பின்னி மில்லுக்கு வந்து விடுங்கள் என்று கூறினர். முதல் படமே பெரிய டைரக்டரின் படம் என்பதால், பயத்தில் அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே இல்லை. அடுத்தநாள் காலையில் ஸ்பாட்டுக்கு 7.30 மணிக்கெல்லாம் சென்று காஸ்டியூம் அணிந்து கொண்டு தயாராகி விட்டேன். ஆனால், மாலை 4 மணிக்குத்தான் என்னை நடிக்க அழைத்தனர்.
ஷாம், கிருஷ்ணமூர்த்தி இருவரும் மேலே இருந்து இறங்கி வர, நான் அவர்களுக்கு பின்னால் வருவது போன்று முதல் காட்சி படமானது. அதன்பிறகு கைதிகள் பிரச்சினை பண்ணும்போது ஷாம் சாருடன் சேர்ந்து அவர்களை சமாளிப்பதுதான் நான் முதல் நாள் நடித்தது. அதோடு, காட்சிகள் நன்றாக வரும் வரை எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டேயிருந்தனர்.
மேலும், அந்த படத்தில் நடித்த ஷாம், ஆர்யா, விஜயசேதுபதி ஆகிய மூன்று ஹீரோக்களுமே என்னிடம் அன்பாக பழகினார்கள். ஒரு புதுமுக நடிகரான என்னிடம் அவர்கள் அப்படி பேசிப்பழகியது எனக்கு பெருமையாக இருந்தது. மேலும், ஒரு காட்சியில் விஜயசேதுபதியை நான் கீழே தள்ளி விட வேண்டும். அந்த காட்சியில் நடித்தபோது, உங்களது மொத்த பலத்தையும் கூட்டி என்னை தள்ளி விடுங்கள் அப்போதுதான் காட்சி நன்றாக வரும் என்று விஜயசேதுபதி சொன்னார். அப்படி நான் அவரை கீழே தள்ளிவிட்ட காட்சி 12 டேக்கிற்கு பிறகுதான் ஓகே ஆனது. ஆனால் நான் அத்தனை முறை தள்ளிவிட்டபோதும் ரியலாகவே கீழே விழுந்து எழுந்து வந்து நடித்தார் விஜயசேதுபதி. நடிப்பு என்றபோதும் அதை ரியலாக அவர் செய்தது ஆச்சர்யமாக இருந்தது.
அதேமாதிரி டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், எப்போது பார்த்தாலும் எனர்ஜியுடனேயே இருப்பார். அவர் வருகிறாரே என்று நாம் எழுந்து நின்றால், உட்காருங்க என்று அன்போடு சொல்வார். அந்த அளவுக்கு எல்லோரையும் மதிக்கக்கூடிய நல்ல டைரக்டர் அவர். சின்ன ஆளு பெரிய ஆளு என்று பார்க்காமல் எல்லோரையும் ஒரே மாதிரியாக நினைப்பவர். அதனால்தான் படப்பிடிப்பு முடிந்து வந்தபோது ஒரு பேமிலியை விட்டு பிரிந்து வருகிற பீலிங் எனக்கு ஏற்பட்டது என்று சொல்லும் ராஷிக், அடுத்தபடியாக ஒரு கிளியின் காதல் என்ற படத்தை தயாரித்து அதில் ஒரு இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து வருகிறார். நெகட்டிவ் வேடம் என்பதால் முதல் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட நடிப்பை கொடுத்துள்ளாராம்.