ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சூர்யா தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில், '24' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் பெயர் மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்தப் படத்திற்குப் பிறகு 'அட்டகத்தி' பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடிக்க வேண்டியது. ஆனால், ரஞ்சித்துக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால் அவர் சூர்யா படத்தை இப்போதைக்கு இயக்க மாட்டார் என்கிறார்கள். அப்படி ரஞ்சித் போய்விட்டார் சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடிக்கவே அதிகம் வாய்ப்புள்ளதாம். சூர்யாவிற்கு முதலில் இந்த மூன்றாம் பாகத்தில் நடிக்க விருப்பமில்லையாம். தொடர்ந்து ஒரே மாதிரியான போலீஸ் வேடத்தில் எப்படி நடிப்பது என்று யோசித்தாராம்.
ஆனால், 'சிங்கம் 3' படத்தின் கதையில் பல புதுப் புது விஷயங்களை இயக்குனர் ஹரி சேர்த்திருக்கிறாராம். அதைக் கேட்ட பிறகு உடனே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் சூர்யா கூறியுள்ளார். 'சிங்கம்' படத்தில் உள்ளூர் தாதாவான பிரகாஷ்ராஜை எதிர்ப்பது கதை, 'சிங்கம் 2'வில் இன்டர்நேஷனல் தாதாவான டானி சபானியை எதிர்ப்பது கதை. அப்படியென்றால் 'சிங்கம் 3'யில் சூர்யா யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை இதற்குள் சொல்லி விடுவார்களா என்ன?. படத்தின் நாயகிகளாக முதலிரண்டு பாகத்தில் இடம் பெற்ற அனுஷ்காவும், புதிதாக ஸ்ருதிஹாசனும் நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் இந்தப் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.