இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விடுதலைபுலிகள் அமைப்பின் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த இசைப்பிரியா இலங்கையில் நடந்த இறுதிப்போரில் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார். இசைப்ரியாவின் வாழ்க்கையை மையமாக வைத்து போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் எஸ்.எஸ்.கே கிரியேஷன் சார்பில் குருநாத் சல்லானி என்பவர் படமாக தயாரித்தார். கு.கணேசன் என்பவர் இயக்கினார். இந்தப் படத்திற்கு தணிக்கை குழு சான்றிதழ் தர மறுத்து விட்டது.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் கு.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 12ந் தேதி தணிக்கை குழுவினர் படத்தை பார்த்தனர். படம் பார்த்து முடித்ததும் தணிக்கை குழு அதிகாரியான ஜெயந்தி முரளிதரன் என்னை அழைத்து படத்தின் தயாரிப்பாளர் எங்கே என்று கோபமாக கேட்டார். நான் இயக்குனர் நான் தான் தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளேன் என்று கூறினேன். அதற்கு அவர் "படத்தின் துவக்கத்தில் முதல்வரின் (ஜெயலலிதா) உரையை யாரிடம் அனுமதி பெற்று வைத்துள்ளீர்கள்?" என்றார். அது முதல்வர் இலங்கை படுகொலை பற்றி சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மான உரைதான் என்று பதிலளித்தேன். "அண்டை நாட்டு ராணுவத்தை தவறாக சித்தரித்துள்ளீர்கள். இரு இரு நாட்டு உறவை பாதிக்கும்" என்றார் அதற்கு நான் விளக்கம் அளித்தேன்.