பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் ரீஎன்ட்ரி ஆவதற்கு முன்பு சில தெலுங்கு படங்களில் நடித்து வந்த அஞ்சலிக்கு வெளிநாட்டில் காதலர் ஒருவர் இருப்பதாகவும், அவரை சந்திக்க அடிக்கடி அவர் வெளிநாடு சென்று வருவதாகவும் ஆந்திராவில் செய்திகள் பரவிக்கொண்டு வந்தன. அதன்காரணமாக, அவர் தனது உடல்கட்டை பராமரிக்காமல் விட்டு விட, இப்போது பூதாகரமாக பெருத்து விட்டார் என்றும் பரபரப்பு செய்திகள் வாசிக்கப்பட்டு வந்தன.
இதனால் அஞ்சலியின் தெலுங்கு சினிமா மார்க்கெட்டும் ஆட்டம் கண்டது. அதனால், மீண்டும் தமிழுக்கு வந்து, விட்ட இடத்தை பிடிக்கும் முயற்சியில் இறங்கிய அஞ்சலி, தனது உடல் ஸ்லிம்பண்ணியதோடு, கேரளா சென்று ஆயுர்வேத அழகு சிகிச்சைகளிலும் ஈடுபட்டாராம்.
மேலும், முன்பு மாதிரி கண்டகண்ட தண்ணீரில் அவர் இப்போது குளிப்பதையும் நிறுத்தி விட்டார். முக்கியமாக, முகத்தில் க்ரீம்கள் பூசுவதை நிறுத்திய அஞ்சலி, ஏதோ ஆயிலைதான் தினமும் படப்பிடிப்பு முடிந்ததும் முகத்தில் போட்டு எண்ணெய் வடிந்தபடி காணப்படுகிறாராம். ஆனால் அப்படி அவர் தலையிலும் முகத்திலும் ஆயில் மசாஜ் செய்த அடுத்த நாள் காலை அவரைப்பார்த்தால் புதுசாக பூத்த புது மலர் போன்று அழகு மிளிர்கிறாராம்.
அதன்காரணமாகவே தனது புதிய அழகை தன்னை வைத்து படம் இயக்குபவர்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது யாராவது பட விசயமாக பேச வேண்டும், கதை சொல்ல வேண்டும் என்றாலே, இரவு நேரங்களில் அவர்களை சந்திக்காமல் காலை வேளைகளிலேயே சந்திக்கும் வழக்கத்தை கடைபிடிக்கிறார் அஞ்சலி.