ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளம் தலைமுறை நடிகைகளில் மிகச்சிறந்த நடிகையாய் பரிமளித்துக் கொண்டிருப்பவர் பார்வதி. சசி இயக்கிய பூ படத்தில் அறிமுகமான பார்வதி, மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அண்மையில் வெளியான உத்தம வில்லன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருந்தார் பார்வதி. சில காட்சிகளில் மட்டுமே முகம் காட்டினாலும் சிறப்பான முத்திரையை பதித்தார். அடுத்து வசந்த் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் பார்வதி.
பிரபல எழுத்தாளர் அசோகமித்ரன் எழுதிய தண்ணீர் என்ற கதையைத்தான் தன்னுடைய அடுத்தப் படமாக வசந்த் படமாக்குகிறாராம். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டுள்ள கதை இது. அதனால் இந்த கதைக்கு பார்வதிதான் மிகவும் பொத்தமாக இருப்பார் என்பதால் அவரை நடிக்க வைக்க முடுவு செய்துள்ளார் வசந்த். பணத்தைப் பற்றி கவலைப்படாமல், நடிக்க ஸ்கோப் உள்ள கதாபார்த்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருபவர் பார்வதி. இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.