டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது டோலியுட்டில் எடுக்கப்படும் படங்களுக்கு நடிகையை தேர்வு செய்யும் போது கிட்டத்தட்ட அனைவரின் ஹாட் சாய்ஸ் யார் என்றால், அது அழகு தேவதை ராகுல் ப்ரீத் சிங் தான் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது. அந்த அளவிற்கு ராகுல் ப்ரீத் சிங் தனது அழகாளும், நடிப்பாலும் அனைவரையும் கவர்ந்து விட்டார். அவர் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் என்றே கூறும் அளவிற்கு அவரது வளர்ச்சி இருக்கின்றது.
வேங்கடதிரி படத்தின் மூலம் டோலியுட்டில் கால் பதித்தவர், தற்போது அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து வருகிறார். அவர் தற்போது ரவி தேஜாயுடன் கிக் 2, ராமுடன் பண்டக செசுகோ, ராம் சரணுடன் புரூஸ் லீ மற்றும் ஜூனியர் என் தி ஆர் சுகுமார் படம் என படு பிஸியாக இருக்கிறார். தற்போது அவர் தனது சம்பளத்தை ரூ 1 கோடியாக உயர்த்தி விட்டார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர், ஆரம்பத்தில் ரூ 30 முதல் ரூ 50 லட்சம் வரை பெற்று கொண்டு இருந்தார். பின்னர் அவர் தனது மார்க்கெட் சூடு பிடித்ததால் சம்பளத்தை ரூ 75 லட்சமாக உயர்த்தினார். தற்போது அவர் முன்னணி இடத்திற்கு வருவதால் தனது சம்பளத்தை ரூ 1 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகின்றது.இந்த செய்தி பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. இதுவரையில் திரிஷா, இலியானா, காஜல் மற்றும் சமந்தா ஆகியோர் தான் ரூ 1 கோடி சம்பளம் பெற்று வருவதாக தெரிகிறது.