அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
டில்லியில் பிறந்து பெங்களூருவில் வளர்ந்த சிந்து பெண்ணான நிக்கி கல்ராணிக்கு கன்னட படங்கள் தவிர மற்ற படங்கள் கைகூடி வருகிறது. தமிழில் அறிமுகமான படம் யாகாவராயினும் என்றாலும் டார்லிங் முந்திக் கொண்டது. அடுத்து யாகாவராயினும் வெளியாக இருக்கிறது. ஆதியுடன் நடித்துள்ள இந்தப் படம் தெலுங்கில் மலுப்பு என்ற பெயரில் வெளிவருகிறது.
இதுதவிர பாபி சிம்ஹாவுடன் கோ 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கில் மலுப்பு தவிர கிருஷ்ணாஷ்டமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கு இடையில் மலையாளத்தில் சுரேஷ் கோபியுடன் ருத்ர சிம்மாசனம். வினித் சீனிவாசனுடன் ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படங்களில் நடிக்கிறார். குறுகிய காலத்தில் மளமளவென படங்கள் குவிந்ததில் சந்தோஷத்தில் மிதக்கிறார் நிக்கி கல்ராணி.
கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகள் தெரிந்த நிக்கி இப்போது தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழியையும் பேசக் கற்றுக் கொண்டுவிட்டார். யாகாவராயினும் படத்திற்கு அவர்தான் தமிழ் டப்பிங் பேசியுள்ளார். எந்த மொழி படத்தில் நடித்தாலும் அந்த மொழியில் தானே டப்பிங் பேச வேண்டும் என்று நினைக்கும் அனுஷ்கா, பூ பார்வதி வரிசையில் இப்போது நிக்கியும் சேர்ந்திருக்கிறார். சூர்யாவுடன் ஒரு படம், அக்கா சஞ்சான கல்ராணியுடன் ஒரு படம், நடித்து விடவேண்டும் என்பதே நிக்கியின் இப்போதைய ஆசை. மற்ற மொழிகளில் நிறைய நடிப்பதால் கன்னடத்தில் நடிக்க முடியாததும் நிக்கியின் வருத்தம்.