'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா |
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த அஞ்சலி, கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 2013ல், சித்தி மற்றும் இயக்குனர் களஞ்சியத்துடன் மோதல் ஏற்பட்டதால், ஐதராபாத்தில், பலுப்பு தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர், திடீரென மாயமானார். கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். நடிகர் ஜெயம் ரவியுடன், அப்பாடக்கர் படத்தில் நடித்தார். இதன் பிறகு, நடிகர் விமலுடன், மாப்ள சிங்கம் படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென மாயமாகி விட்டார் என கூறப்பட்டது. அஞ்சலி, ஐதராபாத்தில் இருந்த போது, ரகசிய திருமணம் நடந்து அதன் மூலம் குழந்தை இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து, அஞ்சலி தெரிவித்துள்ளதாவது: தமிழில், பிசியாக, நான் நடித்துக் கொண்டிருந்தபோது, சில காரணங்களால் என்னால் தொடர்ந்து, நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஐதராபாத்தில் தங்கிவிட்டேன். எனக்கு ஏற்பட்ட பிரச்னைகளை, நானே ஒரு வழியாக சமாளித்து, திரும்பவும் தமிழ் சினிமாவுக்கு வந்தேன். இரண்டு படங்களில் நடித்தேன்.
ஆறு மாதமாக தொடர்ந்து நடித்ததால், சில நாட்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என, ஐதராபாத் சென்றேன். ஆனால், மாப்ள சிங்கம் படப்பிடிப்பில் இருந்து காணாமல் போய்விட்டார்; திருமணமாகி குழந்தை உள்ளது என, திடீரென வதந்தி பரவியது எப்படி; யார் பரப்பியது என, தெரியவில்லை. இந்த செய்தியில் துளிகூட உண்மை இல்லை. நான், தற்போது தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்; ஐதராபாத்தில் இருக்கிறேன். உறவினர் நிகழ்ச்சிக்கு சென்ற போது, குழந்தை ஒன்றை தூக்கி வைத்திருந்தேன். அது என் குழந்தை என, யாரோ வதந்தியை பரப்பி விட்டனர். இவ்வாறு, அஞ்சலி தெரிவித்துள்ளார்.