ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஆர்யா-அக்சயா நடித்த கலாபக்காதலன் படத்தை இயக்கியவர் இகோர். அதையடுத்து திக் திக் திக், தேன்கூடு ஆகிய படங்களை இயக்கிய அவர், தற்போது வந்தா மல என்ற படத்தை இயக்கியிருக்கிறார். முற்றிலும் சென்னை தமிழில் உருவாகியிருக்கும் அப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
மேலும், இந்த படத்தில் 4 சென்னை தமிழ் பேசும் இளைஞர்களை அறிமுகம் செய்திருக்கும் இகோர், கங்காரு பிரியங்காவை ஹீரோயினியாக நடிக்க வைத்திருக்கிறார். கதைப்படி, அந்த 4 பசங்களையும் துடப்பக்கட்டையால் பிரியங்கா அடி அடி யென்று பின்னி எடுக்கும் காட்சியை அப்படத்தின் டிரைலரில் காண்பித்து, இது ஒரு ஜாலியான படம் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அதோடு, செயின் அறுக்கும் பசங்களைப் பற்றிய இந்த படம் முழுக்க முழுக்க ஸ்லம் ஏரியாவிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது. மேலும், சென்னை தமிழில் ஒரு டூயட்டையும் வைத்து அசத்தியுள்ளனர். சாம் டி.ராஜ் என்ற புதுமுக இசையமைப்பாளர் பாடல்களில் தனித்திறமையை காண்பித்து படத்துக்கு சுவை கூட்டியிருக்கிறார்.
மேலும், அந்த டூயட் பாடலில் ஒரு நாட்டுப்புற பாடகியை பாட வைத்தவர்கள், ஆண் குரலுக்கு வித்தியாசமான குரலை தேடியபோது, டைரக்டர் இகோரின் குரலே வித்தியாசமாக இருப்பதாக அனைவரும சொல்ல, அந்த பாடலை அவரே பின்னணி பாடி விட்டாராம். விளைவு, அந்த புதுமையான குரலைக்கேட்ட சில இசையமைப்பாளர்கள், இந்த பாடலை பாடியிருக்கும் பையன் யார்? அவருடைய போன் நம்பரை கொஞ்சம் கொடுக்க முடியுமா? என்று இகோருக்கு போன் செய்து கேட்கிறார்களாம். அந்த அளவுக்கு இகோரின் குரல் அவர்களை ஈர்த்துள்ளதாம்.