ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கர்நாடகத்தை சேர்ந்தவரான ராய் லட்சுமி, தமிழில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில், விஜய்யின் சித்தி மகன் விக்ராந்த் நாயகனாக அறிமுகமான கற்க கசடற படத்தில்தான் அறிமுகமானார். அதன்பிறகு தென்னிந்திய மொழிப்படங்களில் பரவலாக நடித்து வந்தார். அதோடு அவ்வப்போது இந்தி படங்களில் நடிக்கவும் கல்லெறிந்து வந்தார்.
ஆனால், அவரது முயற்சிக்கு பலன் கிடைக்காமலேயே இருந்து வந்தது. இந்த நிலையில், அரண்மனை படத்தின் ஹிட்டுக்குப்பிறகு தற்போது தமிழில் ஒரு டிக்கெட்டுல ரெண்டு படம், சவுகார்பேட்டை, பெங்களூர் டேய்ஸ் படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு, இப்போது இந்தியில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் மெளனகுரு படத்தில் ரீமேக்கான அகிரா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அப்படத்தில் தமிழில் ஹீரோவாக நடித்த அருள்நிதியின் வேடத்தில் சோனாக்ஷி சின்ஹா நடிக்க, இன்னொரு முக்கியமான வேடத்தில் ராய் லட்சுமி நடிக்கிறாராம். அதோடு, தமிழ்ப்படத்தின் கதைக்கரு என்றாலும் இந்திக்காக நிறைய மாற்றங்களை செய்திருக்கிறாராம் முருகதாஸ். அதனால் ராய்லட்சுமிக்கும் நல்ல கேரக்டர் கிடைத்துள்ளதாம். ஆக, இந்தி சினிமாவில் நுழைவதற்காக நீண்டகாலமாக முயற்சி எடுத்து தோற்றுக்கொண்டே வந்த ராய்லட்சுமி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாலிவுட்டில் அழுத்தமாக கால்பதிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டாராம்.