ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெட்ராஸ் படத்தில் தமிழுக்கு வந்தவர் கேத்ரின் தெரசா. அதையடுத்து கணிதன் படத்தில் அதர்வாவுடன் நடித்தார். ஆனால் அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. மேலும், மெட்ராஸ் வெற்றி படம் என்றபோதும் அதில் கேத்ரின் தெரசாவின் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.
மாறாக, அதேபடத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்த ரித்விகாவின் நடிப்பே பேசப்பட்டது. அதனால்தான் அதையடுத்து பல படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அதனால் மெட்ராஸ் பெற்றுத்தராத நல்ல பெயரை கணிதன் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார் கேத்ரின்தெரசா.
இந்நிலையில், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்கயிருந்த த்ரிஷா, அப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார். விளைவு, அந்த வாய்ப்பு இப்போது கேத்ரின் தெரசாவுக்கு கிடைத்திருக்கிறது. மேலும், த்ரிஷா நடிக்கயிருந்த வேடம் என்பதால், அதே படத்தில் இன்னொரு நாயகியாக டாப்சி இருந்தும்கூட கதையைகூட கேட்காமல் கமிட்டாகி விட்டாராம் கேத்ரின். காரணம், த்ரிஷா ரொம்ப பெரிய நடிகை. அவர் ஒரு வேடத்தில் நடிக்கயிருந்தார் என்றால் அது கண்டிப்பாக பெரிய வேடமாகத்தான் இருக்கும். அதனால்தான், அந்த வேடத்தில் நடிக்க கதை கேட்க வேண்டியதில்லை என்று எதையும் கேட்காமல் கமிட்டாகி விட்டேன் என்று கூறி வருகிறார் கேத்ரின் தெரசா.