டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ்த் திரையுலகில் நடுவில் கொஞ்ச காலம் காணாமல் போயிருந்த அஞ்சலி அடுத்த இன்னிங்ஸில் தற்போது பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். “அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம்” ஆகிய படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டார். அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'இறைவி' படத்தில் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அஞ்சலியை நன்றாக இளைக்கச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதற்காக கடுமையாக உடற்பயிற்சி செய்து சுமார் 10 கிலோ வரை அஞ்சலி குறைந்திருக்கிறாராம்.
இடையில் காணாமல் போய் வந்த அஞ்சலி நிறையவே குண்டாகி விட்டார். 'அப்பா டக்கர், மாப்பிள்ளை சிங்கம்' படங்களின் புகைப்படங்களைப் பார்த்தாலே அது தெரியும். ஆனால், அந்தப் படத்தின் இயக்குனர்கள் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. ஒரு வேளை கதைப்படி அஞ்சலி குண்டாக இருந்தால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்களோ என்னவோ தெரியவில்லை. 'இறைவி' படத்துடன் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது படத்திலும் அஞ்சலியை நடிக்க வைக்க பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறதாம்.
'மாப்பிள்ளை சிங்கம்' வெளிவந்ததும் தன் அடுத்த இன்னிங்ஸ் வெற்றிகரமாகவே ஆரம்பமாகும் என அஞ்சலியும் நினைத்து வருகிறாராம்.