பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நகுல், நிகிஷா பட்டேல், ஸ்ருதி ஆகியோர் நடிக்க நாக வெங்கடேஷ் இயக்கி வரும் படம் நாரதன். இப்படத்தின் பிரஸ்மீட், மற்றும் இசைவெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது. நாரதன் படத்தில் பங்கு பெற்ற அத்தனை நடிகர் நடிகைகளும் விழாவுக்கு வந்தனர். படத்தின் நாயகனான நகுல் மட்டும் வரவில்லை. நகுல் பிஸியான நடிகரும் இல்லை. பிறகு ஏன் நாரதன் விழாவுக்கு வரவில்லை?
நாரதன் படத்தில் நடிக்க நகுலுக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. 40 லட்சத்தைக் கொடுத்துவிட்ட தயாரிப்பாளரால் 10 லட்சத்தைக் கொடுக்க முடியவில்லை. ராதாரவி முன்னிலையில் நடைபெற்ற பஞ்சாயத்தில் சம்பள பாக்கி 10 லட்சத்தில் 5 லட்சத்தைக் குறைத்துக் கொண்டு 5 லட்சத்தை வாங்கிக் கொண்டு படத்தை முடித்துக்கொடுப்பதாக சொல்லி இருக்கிறார் நகுல். அதன்படி 5 லட்சத்தை நகுலிடம் கொடுத்துவிட்டார் தயாரிப்பாளர். பணத்தை பெற்றுக் கொண்ட நகுல், ராதாரவி முன்னிலையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக மீதி 5 லட்சத்தையும் கேட்டு அடம்பிடித்திருக்கிறார். அவர் கேட்ட பணத்தை தயாரிப்பாளர் தரவில்லை. அந்த கோபத்தில்தான் பிரஸ்மீட், மற்றும் இசைவெளியீட்டுவிழா உள்ளிட்ட நாரதன் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர மறுத்துவிட்டாராம் நகுல்.