தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
படத்தின் வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய காரணம், வலுவான ரசிகர்கள் பட்டாளம் இருந்தால், பீகே போன்ற ஹிட் படங்களை தரமுடியும் என்று பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.
பாம்பே வெல்வெட் படம் குறித்தும், படத்தின் வெற்றிக்கு ரசிகர்களே காரணம் என்பது குறித்தும், நம்மிடம், ரன்பீர் கபூர், கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
இயக்குநர் அனுராக் காஷ்யப், பெரிய நடிகர்களுடன் பணிபுரியாத நிலையில், உங்களை அவர் எப்படி தேர்ந்தெடு்த்தார்?
நான் இதுகுறித்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. பாம்பே வெல்வெட் படத்தின் கதை, மற்றும் அதில் எனது கேரக்டர் பிடித்திருந்ததால், எவ்வித கேள்வியும் கேட்காமல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். கேங்ஸ் ஆப் வாஸிபர் படம் பார்த்தேன், படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தை, அனுராக் காஷ்யப் எடுக்க இருப்பதை தெரிந்துகொண்டதால், எவ்வித மறுப்பும் தெரிவிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. அனுராக் காஷ்யப், கதை சொல்வதில் வல்லவர் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை...
அனுராக் உடனும், அபினவ் உடனும் பணிபுரிந்துள்ளீர்கள். இருவருக்கும் இடையே இருந்த வேறுபாட்டை சொல்லுங்கள்
அபினவ் இயக்கத்தில் பெஷாரம் படத்தில் நடித்தேன். அபினவ், தான் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதோடு மட்டுமல்லாது, தன்னை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர். அவர் படங்களுக்கு என்று நிறைய ஆடியன்ஸ்கள் உள்ளனர். அவரது படங்களில் ஹீரோயிசம் சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால், அனுராக் அப்படியல்ல. அவர் யாருடனும் அவ்வளவு எளிதில் ஒட்டமாட்டார். அனுராக், கதையை நம்பி படமெடுப்பவர். இருவருக்கும் இடையே இந்தளவிற்கு வேறுபாடுகள் இருந்தநிலையிலும், அவ்விருவரிடையேயும், எனக்கு சிறந்த நட்பு உள்ளது.
பெஷாரம் படத்திற்காக மன்னிப்பு கேட்டீர்களாமே?
இல்லை. நான் ஒருபோதும் என்னுடைய படங்களுக்காக, யாரிடமும் மன்னிப்பு கோரியதில்லை. ஏனெனில், படத்தின் வெற்றி மற்றும் தோல்விக்கு அப்படத்தின் ஹீரோக்களே காரணம் என்பதை அப்போது அறிந்துகொண்டேன். ஹிட் படம் தரவேண்டுமென்றால், 3 முதல் 4 பாடல்கள், சில காமெடி காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் இருக்க வேண்டும். ஒரு ஹிட் மசாலா படம் தர வேண்டுமென்றால், கடினமாக உழைக்க வேண்டும், அதுமட்டுமல்லாது, நமக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்க வேண்டும். அப்போது தான், பீகே, தபாங், சென்னை எக்ஸ்பிரஸ் போன்று ஹிட் மசாலா படங்களை தர முடியும்.
படத்தின் தோல்வி, நடிகரின் மார்க்கெட் மதிப்பை பாதிக்கிறதா?
நிச்சயமாக.....ராக்ஸ்டார், பார்பி, யே ஜவானி ஹைய் தீவானி உள்ளிட்ட நான் நடித்த படங்கள் பார்த்த மக்கள் அதன்பின், என்னிடமிருந்து நிறைய நடிப்பை எதிர்பார்த்தனர். அப்போது தான் மக்கள், என் மீது வைத்திருந்த நம்பிக்கையை உணர்ந்தேன், நான் முன்னணி நடிகராக உயர்ந்திருந்ததையும் தெரிந்துகொண்டேன். ஆனால், பெஷாராம் படம், எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. உடனே, என் மீதிருந்த நம்பிக்கை, மக்களிடையே பாதியாக குறைந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட நான், தற்போது வெளிவந்துள்ள பாம்பே வெல்வெட் படத்தில் எனது முழுத்திறமையை காட்டியுள்ளேன்...
பாம்பே வெல்வெட் படத்தின் முதல் டிரைலர் வெற்றி பெறவில்லை...2வது டிரைலர் வெற்றி பெற்றது...இதன்மூலம் தாங்கள் தெரிந்துகொண்டது?
உண்மை தான். ஒப்புக்கொள்கிறேன். படத்தின் முதல் டிரைலர் போதிய அளவு வரவேற்பு பெறவில்லை. ஏனெனில், அனுராக் உடன் முதன்முறையாக இப்படத்தின் மூலம் தான் நான் சேர்ந்து பணியாற்றியுள்ளேன், எங்களுக்குள் அப்போது ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து, எங்கு தப்பு நிகழ்ந்துள்ளது என்பதை தெரிந்துகொண்டு, அவ்விடங்களில் எல்லாம் சேர்ந்து பணியாற்றினோம். இரண்டாவது டிரைலரில், ஒருமித்த கருத்து மற்றும் உணர்வுடன் சேர்ந்து பணியாற்றினோம், அதில் வெற்றியும் பெற்றோம். கடின உழைப்பிற்கு, வெற்றி நிச்சயம் என்பது இதில் மீண்டும் நிரூபணமானது.
பாம்பே வெல்வெட் படத்தில் உங்களை கவர்ந்த விசயம்?
படத்தின் கதை, எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதேபோல் கேரக்டரும் பிடித்திருந்தது. நான் இதுவரை நடித்துள்ள படங்களில், இது மிகவும் வித்தியாசமான படம் ஆகும். இந்த படத்தை, ரசிகர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...