தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அழகு நடிகையான ஸ்ருதிஹாசன், தனக்கு காமெடியை கற்று கொடுத்த குரு, ரவி தேஜா தான் என்று கூறியுள்ளார். ஒரு கலைஞன் தனது நகைச்சுவை உணர்வை வெளிக்காட்டி மற்றவர்களை சிரிக்க வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று தனது தந்தையும், நடிகருமான கமல்ஹாசன் கூறியதாக ஸ்ருதி கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது நானும், ரவி தேஜாவும் இணைந்து பலுபு என்ற காமெடி கலக்கலில் ஒன்றாக சேர்ந்து நடித்தோம். அவருக்கு காமெடி மிக எளிதாக வரும். அவர் தான் காமெடி எப்படி பண்ண வேண்டும் என்று எனக்கு கற்று கொடுத்தார். அவரும், பிரம்மானந்தமும் எப்படி ரிஹர்சல் செய்கிறார்கள் என்பதனை நான் நன்றாக உற்று நோக்கி கற்றுக்கொள்வேன். ஒவ்வொரு மனிதனிடமும் நகைச்சுவை உணர்வு உள்ளது என்றும் அதை தாமாகத்தான் வெளியே கொண்டு வரவேண்டும் என்று ரவி தேஜா என்னிடம் சொல்வார். மேலும் நாம் சிரிக்காமல் மற்றவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவை, என்று கூறியுள்ளார்.