இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
திரைப்படங்களில் 'சோலோ' நடன நடிகராக திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த பிரபுதேவா அதன் பின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவராக விளங்கினார். தென்னிந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது, ஹிந்தித் திரையுலகிலும் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
தெலுங்கில் 'நூவொஸ்தாவன்டே நேனொன்தன்டானா' படம் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். அதன் பின் விஜய் நடித்த 'போக்கிரி' படத்தின் மூலம் தமிழிலும் இயக்குனராக அறிமுகமானார். ஹிந்தியில் 'வான்டட்' வெற்றிப் படத்தை இயக்கியதன் மூலம் அங்கும் மோஸ்ட் வான்டட் இயக்குனராக மாறினார். தற்போது 'சிங் இஸ் பிளிங்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
விரைவில் பிரபுதேவா புரொடக்ஷடன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் ஒன்றை பிரபுதேவா ஆரம்பிக்க உள்ளாராம். இந்த நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரிக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவர் மட்டுமல்லாது மற்ற இயக்குனர்களுக்கும், இந்தப் பட நிறுவனத்தில் வாய்ப்பு கொடுக்க உள்ளாராம். விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.