தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரமணா படத்தில் மிக முக்கியமானதும் ரசிகர்களால் ஆரவாரமாக பார்த்து ரசிக்கப்பட்டதுமான காட்சி என்றால் பிணத்திற்கு ட்ரீட்மென்ட் கொடுத்துவிட்டு, மருத்துவமனை நிர்வாகம் லட்சக்கணக்கில் பீஸ் கேட்கும் காட்சிதான். பத்து நிமிடங்களுக்கு குறையாமல் ஓடும் இந்தக்காட்சிதான் படத்தின் ஹைலைட்டே.. ஆனால் தற்போது ரமணா ரீமேக்காக இந்தியில் உருவாகியுள்ள 'கப்பார் இஸ் பேக்' படத்திற்கு இந்தக்காட்சியினால் எதிர்ப்பு தேடிவந்துள்ளது.
இந்திய மருந்துவ சங்கம் (ஐ.எம்.ஏ) இந்தப்படத்தில் டாக்டர்கள் இறந்தவர்களுக்கு கூட சிகிச்சை அளிப்பதாகவும் அதற்கும் கூட ஏகப்பட்ட பணத்தை பிடுங்குவதாகவும் காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இது புனிதமான மருத்துவ தொழிலையும், மருத்துவர்களின் பணியையும் களங்கப்படுத்தும் நோக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.. இதனால் மருத்துவர்களின் மனம் ரொம்பவே புண்பட்டுள்ளது. அதனால் சம்பந்தப்பட்ட காட்சிகளை உடனே நீக்கிவிட்டு, அதன்பின் படத்தை திரையிட வேண்டும் என பட தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் நடிகர் அக்சய் குமார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமல்ல சென்சார் போர்டுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “சம்பந்தப்பட்ட மருத்துவமனை காட்சியை நீக்கவேண்டும் என்றும், அதுவரை படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மருத்துவர்களை இழிவுபடுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளதால் நஷ்ட ஈடாக ஐந்த கோடி ரூபாய் வழங்கவேண்டும் என்றும் இதுகுறித்த மன்னிப்பு கடிதம் ஒன்றை தேசிய நாளிதழ்களில் வெளியிட வேண்டும் என்கிற நிபந்தனையையும் விதித்துள்ளது.