'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
வைகாசி பொறந்தாச்சி, கிழக்கே வரும் பாட்டு போன்ற படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி இருக்கும் படம் ''நண்பர்கள் நற்பணி மன்றம்''. செங்குட்டுவன், அக்ஷயா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இவனுக்கு தண்ணியில கண்டம் படத்தில் நான் கடவுள் ராஜேந்திரன் காமெடி பேசப்பட்டதை தொடர்ந்து இந்தப் படத்திலும் அவரது காமெடியை பெரியதாக நம்பி உள்ளனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராதாபாரதி கூறியதாவது: காதல் வரைக்கும் உடன் இருக்கும் நண்பர்கள் கல்யாணத்துக்கு பிறகு உதவுகிறார்களா? அவர்கள் நட்பு எதுவரை இருக்கிறது என்பதை சொல்லும் படம். எனது முந்தைய படங்கள் நிறைய செண்டிமென்டுகளுடன் இருக்கும் இதனை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ப உருவாக்கி இருக்கிறேன்.
வில்லனாக அறிமுகமானாலும் நான் கடவுள் ராஜேந்திரன் நல்ல காமெடியானாக வளர்ந்து வருகிறார். அவரை இந்தப் படத்தில் முழு நீள காமெடியனாக நடிக்க வைத்திருக்கிறேன். மட்டன் ஸ்டால் வைத்திருக்கும் அவர் ஆடுகளின் மீது மிகுந்த பாசம் கொண்டவர். வெட்டப்பட்ட ஆட்டிற்காக ஒரு சொட்டு கண்ணீர்விடுவார். இப்படி கருணையும், கொலையும் கலந்த ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த கமெடி பரவலாக பேசப்படுவதாக இருகும். என்றார்.