தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சாதாரணமாக மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோயினிகள் சற்று முதிர்ச்சியான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றாலே அலறிக்கொண்டு ஓடுவார்கள். இப்படி நடித்தால் எனது ஹீரோயின் இமேஜ் போய் விடும். அதன்பிறகு எல்லோருமே அக்காள், ஆன்ட்டி வேடங்களில் நடிக்கத்தான் கூப்பிடுவார்கள் என்பார்கள்.
ஆனால், அஞ்சானில் அதிரடி கிளாமரை வெளிப்படுத்தி நடித்த சமந்தா, அதையடுத்து விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் டபுள் ரோலில் மாறுபட்ட கோணத்தில் நடித்திருப்பவர், இப்போது வேல்ராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்து வரும் ''வேலையில்லா பட்டதாரி-2'' படத்தில் தனுஷின் மனைவியாக நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு சமந்தாவை புக் பண்ண சென்றபோது, மனைவி வேடத்தில் அவர் நடிப்பாரா என்ற சந்தேகத்துடன் தான் சென்றார்களாம். ஆனால், கதையைக்கேட்ட சமந்தா, எனக்கு ஏற்கனவே தனுஷின் நடிப்பு ரொம்ப பிடிக்கும். அதிலும். இதுவரை படத்துக்குப்படம் காதலி வேடங்களாக நடித்து வந்த எனக்கு இந்த மனைவி கதாபாத்திரம் ஒரு மாறுதலாக உள்ளது. அதனால் இந்த படத்தில் தனுசுடன் மிக இயல்பாக நடிப்பேன் என்றாராம்.
அதனால், இப்போது அப்படத்தில் பழைய சாயல் எதுவும் இல்லாமல் மிக வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து வரும் சமந்தா, பத்து எண்றதுக்குள்ள படத்தில் எப்படி வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறோனோ அதற்கு இணையாக இந்த படமும் என்னை வேறுபடுத்தி காட்டும். அதுவும் மனைவியாக நடிப்பது எனக்கு எப்படி புதுமையான அனுபவமாக இருக்குமோ அதேபோல் ரசிகர்களுக்கும் புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று முழு மனநிறைவுடன் இந்த படத்தில் நடிக்கத் தொடங்கினாராம் சமந்தா.