'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சந்தானத்தை ஒரு முழு ஹீரோவாக்குவதற்கு திரைக்குப்பின்னால் ஆர்யா ரொம்பவே மெனக்கெட்டு வருகிறார். காரணம் சந்தானம் அவரது உயிருக்கு உயிரான நண்பேன்டா என்பதினால்தான். அந்த வகையில், அவர் ஹீரோவாகப்போறேன் மச்சான் என்று அவரிடம் சொன்னதுமே, அப்படின்னா முதல்ல டான்ஸ் கத்துக்கோ என்றாராம்.
அதையடுத்து, மச்சான் என்ன பண்ணினாலும உடம்பே இறங்கவே மாட்டேங்குதேடா? என்றபோது, அவரை மகாபலிபுரம் வரை சைக்கிள் மிதிக்க வைத்து சந்தானம் ஏற்கனவே இருந்த எடையில் பாதியாக்கி விட்டார் ஆர்யா. ஆக, முதல் படத்தில் அவர் ஆடிய நடனத்தைப்பார்த்து முதல் கைதட்டல் கொடுத்தவரும் ஆர்யாதானாம். பிச்சிட்டே மச்சான் என்று தட்டிக்கொடுத்திருக்கிறார்.
இந்தநிலையில், தற்போது தான் நடித்துள்ள இனிமே இப்படித்தான் படத்திற்கு இனிமே ஹீரோதான் என்ற டைட்டீலை வைத்திருப்பதாக சொன்ன சந்தானம், இனிமே இப்படித்தான் நடிக்கப்போறேன் என்று சொன்னாராம். அதைக்கேட்டு, இனிமே ஹீரோதான் என்பதைவிட இனிமே இப்படித்தான் என்பது நல்லாயிருக்கு மச்சான். இதையே படத்தோட டைட்டீலா வச்சிறேன் என்று ஆர்யா சொன்னதை அடுத்து, தனது நண்பேன்டா சொல்லுக்கு மறுபேச்சில்லை என்று இனிமே இப்படித்தான் என்ற டைட்டீலையே வைத்து விட்டாராம் சந்தானம்.
ஆக, நண்பன் ஆர்யாவின் சொல்லுக்கு மாற்று கருத்தில்லை என்ற முடிவில் இருக்கிறார் சந்தானம்.