புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
பொதுவாக நித்யா மேனன் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன் நிறைய நிபந்தனைகள் விதிப்பார் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பார் என்ற தகவல் தமிழ் சினிமாவில் பரவிக்கிடக்கிறது. இது குறித்து நித்யா என்ன சொல்கிறார்.
"சினிமாவை நான் ஒரு கலையாக பார்க்கிறேன். பணம் சம்பாதிக்கும் தொழிலாக பார்ப்பதில்லை. நான் நடிக்கும் கேரக்டர் எனக்குள் நுழைய வேண்டும். சும்மா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தோம், சொல்லிக்கொடுத்த வசனத்தை மனப்பாடம் செய்தோம். டைரக்டர் சொன்னபடி நடித்தோம், சென்றோம் என்று என்னால் இருக்க முடியாது. நான் நடிக்கும் கேரக்டரில் நான் வாழ்ந்து பார்க்க வேண்டும். அப்போதுதான் அதை உணர்ந்து நடிக்க முடியும்.
காஞ்சனா 2 வில் கால் ஊனமுற்ற பெண் கேரக்டர் நீங்கதான் நடிக்கணும்னு லாரன்ஸ் சார் சொன்னதும் நான் உடனே ஓகே சொல்லவில்லை எனக்கு கொஞ்சம் டயம் கொடுங்கன்னு கேட்டு, வீட்டில் ஊனமுற்ற பெண்காக கால்வலிக்க நடந்து பார்த்து எனக்கு திருப்பி வந்த பிறகே ஒப்புக் கொண்டேன். அதற்காக லாரன்ஸ் சார் 2 மாதம் காத்திருந்தார். எனது கேரக்டர் பற்றி நிறைய கேள்விகள் கேட்பேன். எனக்கு திருப்தி ஏற்பட்டுவிட்டால் அதன் பிறகு எந்த கேள்வியும் இருக்காது. இந்த கேள்விகளை நிபந்தனை என்று எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்ய முடியும்.
கிளாமராக நடிக்க பலர் அழைத்தார்கள். அப்படி நடித்து எனது வங்கி கணக்கையும், நடிக்கும் படங்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. எந்த கேரக்டரையும் அனுபவித்து நடிக்க விரும்புகிறேன். அதனால் காலஅவகாசம் எடுத்துக் கொள்வேன். அதில் தவறில்லை" என்று நினைக்கிறேன் என்கிறார் நித்யா மேன்.