இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரெயின் டிராப்ஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அம்பத்தூரில் உள்ள ஆனந்தம் என்ற முதியோர் இல்லத்தில் அன்னையர் தினத்தைக் கொண்டாடியது. இந்த அமைப்பின் விளம்பர தூதரான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரைஹானா தலைமையில் தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பழம்பெரும் பின்னணி பாடகி பி.சுசீலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அவரை ரெய்ன் டிராப் அமைப்பும், ஆனந்தம் இல்லமும், சிறந்த தாலாட்டு பாடல்களை பாடியதற்காக சிறந்த அன்னை என்று பெருமைப்படுத்தி பி.சுசீலாவை பாராட்டி கவுரவித்தது.
பின்னர் இல்லத்தை சுற்றிப் பார்த்த பி.சுசீலா முதியவர்களுடன் மனம்விட்டு பேசினார். அவர்களில் பலரும் பி.சுசீலாவின் ரசிகைககளாக இருந்து சுசீலாவின் பாடல்கள் எப்படி தங்கள் வாழ்க்கையோடு இணைந்திருந்தது என்பதை விவரித்தனர். அதைக் கேட்டு சுசீலா நெகிழ்ந்து போனார்.