அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தை அடுத்து சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் நடித்துள்ள கன்னட நடிகை அகிலா கிஷோர், இந்த படங்களில் இளைஞர்களை கொள்ளை கொள்ளும் கிளாமரை வாரி வழங்கி நடித்திருக்கிறார்.
அதிலும், பார்த்திபன் படத்தில் பாடல் காட்சிகளில் பளிச்சிட்டதை விட, சந்தானத்தின் இனிமே இப்படித்தான் படத்தில் கூடுதல் கிளாமராய் ஜொலித்திருக்கிறாராம் அகிலா. இதே படத்தில் இன்னொரு நாயகியான ஆஷ்னா சவேரியும் இருப்பதால் அவருக்கு முன்பு தான் சோடை போய் விடக்கூடாது என்று இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளாராம் அகிலா.
இந்த படங்களை அடுத்து அவர் நடித்திருக்கும் இன்னொரு படம்தான் மூன்றாம் உலகப்போர். இந்தியா-சீனாவுக்கிடையிலான போர்முனை கதையில் இப்படம் உருவாகியிருக்கிறது. 2025க்கு பிறகு இந்தியா சீனாவுக்கிடையே போர் நடந்தால் சீனாவின் பல ஏரியாக்கள் இந்தியா வசம் வந்து விடும் என்கிற வகையில் இந்த படத்தின் கதை உருவாகியுள்ளது.
சுனில்குமார் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவரது காதலியாக அகிலா கிஷோர் நடித்திருக்கிறார். ஆனால், காதலிப்பது மட்டுமே இல்லாமல், மண் சார்ந்த சில உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் நடித்து கண்கலங்க வைத்துள்ளாராம் அகிலா. அதனால் இந்த படத்திற்கு பிறகு அகிலா கிஷோரின் கோலிவுட் மார்க்கெட் எகிறி விடும் என்கிறார்கள்.