பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
ஸ்ருதிஹாசன் சிறந்த நடிகை மட்டுமல்ல, சிறந்த பாடகி மற்றும் இசையமைப்பாளரும் கூட. சினிமாவில் யார் பாட கூப்பிட்டாலும், தனக்கு பிடித்திருந்தது என்றால் பாட மறுப்பதில்லை ஸ்ருதிஹாசன். அந்தவகையில் இப்போது சிம்பு - நயன்தாரா நடித்துள்ள ''இது நம்ம ஆளு'' படத்தில் ஒரு பாட்டு பாடியிருக்கிறார்.
சிம்புடனான காதல் முறிவுக்கு பின்னர் இந்த ஜோடி மீண்டும் சேர்ந்து நடிக்காதா என்ற சூழலில், பாண்டிராஜ், ''இது நம்ம ஆளு'' படத்திற்காக சிம்புவையும், நயன்தாராவையும் மீண்டும் ஜோடி சேர்த்தார். இருவரும் சேர்ந்து மீண்டும் நடிப்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. மேலும் சிம்புவின் தம்பி குறளரசன் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ப்ளஸ்ஸான விஷயங்கள் நிறைய உள்ளன. ஆனாலும் சிம்புவின் வழக்கமான படங்களை போன்று இந்தப்படமும் சில பல பிரச்னைகளால் முடியாமல் இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் ஹைலைட்டான விஷயங்கள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அவருடன் சேர்ந்து சிம்புவின் தம்பியும், இப்படத்தின் இசையமைப்பாளருமான குறளரசனும் பாடியிருக்கிறார். பாடலும் நன்றாக வந்துள்ளதாம்.
தற்போது சிம்புவின் வாலு படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. வாலு படம் முடிந்தவுடன் இது நம்ம ஆளு படம் ரிலீஸாக இருக்கிறது.