தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரம்மி படத்திற்கு பிறகு கவனிக்கப்படும் நடிகையானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன்பிறகு இவர் நடித்து வெளியான திருடன் போலீஸ், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு படங்களுமே பெரிதாக ஓடவில்லைதான். என்றாலும், தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் அவர் நடித்த காக்கா முட்டை படம் அவருக்கு பெரிய பெயரை வாங்கிக்கொடுத்திருக்கிறது.
அதோடு, அவரது பர்பாமென்ஸ் குறித்து கோலிவுட் முன்னணி இயக்குனர்களே பாராட்டி வருகின்றனர். மேலும், காக்கா முட்டையில் அவரை நடிக்க வைத்த இயக்குனர் மணிகண்டன் அவரது நடிப்புத்திறமையைப்பார்த்து அதையடுத்து விதார்த்தைக்கொண்டு இயக்கி வரும் குற்றமும் தண்டனையும் படத்திலும் ஐஸ்வர்யாவையே நடிக்க வைத்துள்ளார்.
இந்த நிலையில், காக்காமுட்டை படம் தேசிய விருது பெற்ற பிறகு தனுஷை சந்தித்த ஐஸ்வர்யா ராஜேஷை அவரும் பாராட்டினாராம். சில காட்சிகளை குறிப்பிட்டு, உங்கள் நடிப்பு ரொம்ப யதார்த்தமாக இருந்தது. தொடர்ந்து இதை விடவும் சிறப்பாக நடிக்க வாழ்த்துகிறேன் என்றாராம்.